1. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
சிறப்புஈனும் - பெருமை
தரும்
செல்வமும் ஈனும் - செல்வத்தையும்
(பொருளையும்) தரும்
அறத்தினூஉங்கு - தருமத்தின்
பயனாக
வீடு பேறாகிய சிறப்பையும் செல்வச்செழிப்பையும்
அறவழியானது எமக்குத் தருவதால், அந்த அறவழியை விட மேன்மையானது
ஏதாவது உண்டா?
2. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
அறத்தினூஉங்கு - தருமத்தின்
பயனாக
ஒருவருக்கு தருமத்தை விட நன்மை தரக்கூடியது
எதுவுமில்லை அதேபோல் அதனைச் செய்ய மறப்பதைப் போல கெடுதியானதும் ஒன்றுமில்லை.
3. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
ஒல்லும்
வகையான் - தத்தமக்கு
இயலுமான வரையில்
ஓவாதே - ஒழியாதே
- நிறுத்தாதே.
செல்லும்வாய் எல்லாம் - செல்லும்
இடமெல்லாம்
செல்லும் இடமெல்லாம், தமக்குத்
தமக்கு இயலுமான வரையில் அறச்செயல்களைத் தொடர்ந்து செய்யவேண்டும்.
4. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
மனத்துக்கண் - மனத்தின்கண்
- தனது மனத்துக்கு
மாசிலன் - மாசு
+ இலன் - குற்றம் இல்லாதவன்
அனைத்தறன் - அனைத்து
+ அறன் - அதுவே தருமம்
பிற - மற்றவை
ஆகுல நீர - அறம்
ஆகாது
தனது மனத்துக்கு குற்றம் இல்லாதவனாக இருப்பதே தருமமாகும். மற்றவை எல்லாம் அறம்
ஆகாது.
5. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
அழுக்காறு - பொறாமை
அவா - ஆசை
வெகுளி - சினம்
இன்னாச்சொல் - கடுஞ்சொல்
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும்
இடங்கொடுக்காமல் அவற்றைக் தவிர்த்து ஒழுகுவதே அறமாகும்.
6. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
அன்றறிவாம் - அன்று
+ அறிவாம் = பிறகு பார்த்துக்கொள்ளலாம்
என்னாது - என்று
கூறாது
பொன்றுங்கால் - இறக்கும்போது
பொன்றா - அழியாத
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல்
அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை
நிற்கும்.
7. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
அறத்தாறு = அறத்து + ஆறு = அறத்தின பயன்
இதுவென = இது என
சிவிகை = பல்லக்கு
பொறுத்தானோடு = தூக்குபவனோடு
ஊர்ந்தான் = பயணிப்பவன்
அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும்
கண்ட அளவில் பயனை அறியலாம்.
அதாவது
அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து
செல்பவர்களைப் போலவும்
தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ
பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போலவும்-இருப்பர். இவர்கள் இருவரையும்
ஒப்பிடுவதன் மூலம் - தருமத்தின் பயன் யாது என்று அறிந்து கொள்ளலாம்.
8. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
வீழ்நாள் = பயனற்ற நாள்
படாஅமை = கழிந்து போகாமல்
நன்றாற்றின் - நன்று
+ ஆற்றின் - நல்லது செய்யின்
வாழ்நாள் வழியடைக்கும் கல் - வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
ஒருநாள் கூட பயனற்றதாக கழிந்து போகாமல் நல்லது
செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.
அதாவது அவனுக்கு வீடுபேறு (முத்தி) கிடைக்கும்.
9. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
அறத்தான் - அறத்தால்
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்.
அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
10. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
செயற்பாலது - செய்யகூடியது
உயற்பால - ஒழிக்ககூடியது - தவிர்க்கக்கூடியது
ஒருவன் செய்யத் தக்கது அறமே; செய்யாமல் (தவிர்க்கத்)விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.
அறன்வலியுறுத்தல் முற்றும்
No comments:
Post a Comment